கார் சறுக்கி மரத்தில் மோதி விபத்து; இருவர் பலி! ஜொகூரில் ஆயர் ஹீத்தாம் சாலையில் சோகம்

top-news
FREE WEBSITE AD

கூலாய், மே 27:  நேற்று  இங்குள்ள ஜொகூர் பாரு–ஆயர் ஹீத்தாம் சாலையின் 27வது கிலோமீட்டரில்,  கார் சறுக்கி மரத்தில் மோதியதில் இரண்டு நண்பர்கள் உயிரிழந்தனர்.

கூலாய் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் டான் செங் லீ, அதிகாலை 3.05 மணிக்கு இந்த விபத்து குறித்த தகவல் அதிகாரிகளுக்குக் கிடைத்ததாகக் கூறினார்.

அந்த வாகனத்தை 24 வயது இளைஞர் ஓட்டி வந்ததாகவும், 22 வயது பெண் ஒருவர் அதில் பயணித்ததாகவும் அவர் கூறினார்.

ஜொகூர் பாரு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் கார், சாலையின் இடதுபுறத்தில் இருந்த மரத்தில் மோதும் முன் சறுக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் பலத்த காயமடைந்தனர், மேலும் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதுஎன்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *