காசாளர் குத்திக் கொலை-எட்டாவது நபர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 6-

செராஸ் பகுதியில் பேரங்காடியொன்றில் உள்ள உணவகமொன்றின் காசாளர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முப்பத்து நான்கு வயதான சீன நாட்டுப் பெண் ஒருவரை போலீசார் புதன்கிழமை மாலையில் கைது செய்தனர்.

அச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள எட்டாவது சந்தேகப் பேர்வழி இவர் ஆவார். கேஎல் செண்ட்ரலில் மாலை 4.30மணிக்கு அவர் கைது செய்யப்பட்டார் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது இசா தெரிவித்தார். இதற்குமுன் கைதுசெய்யப்பட்ட எழுவரின் தடுப்புக் காவல் இன்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.

கைதுசெய்யப்பட்டுள்ள எழுவரில் இருவர் சீன நாட்டு ஆடவர்கள். மேலும் நால்வர் மியன்மார் நாட்டவர்கள்.அவர்களுள் இருவர் பெண்கள். ஒருவர் உள்நாட்டு ஆடவர் என்று ருஸ்டி குறிப்பிட்டார். கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த உணவகத்தின் காசாளரான சீன நாட்டுப் பெண் ஒருவர் (வயது 49) குத்திக் கொலை செய்யப்பட்டார். அச்சம்பவம் பிற்பகல் 3மணிக்கும் 4 மணிக்கும் இடையில் நடை பெற்றது. கைது செய்யப்பட்ட எண்மரும் அப்பெண்ணின் சகாக்கள் ஆவர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *