பினாங்கு சிம்பாங் அம்பாட்டில் நாளை முதல் சனிக்கிழமை வரை நீர் விநியோகத் தடை

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன்:

பினாங்கு சிம்பாங் அம்பாட்டில் உள்ள கிட்டத்தட்ட 4,000 பயனாளர்கள் நாளை முதல் சனிக்கிழமை வரை திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடையை எதிர்நோக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாலான் மெராக் 5, தாமான் மெராக், செபராங் பிறை செலாத்தான் ஆகிய இடங்களில் குழாய் இணைப்புப் பணிகளை இறுதி செய்வதற்காக இந்த இடையூறு ஏற்படுவதாக PBAPP  அறிக்கையில் அறிவித்துள்ளது.

இந்த தடை நாளை இரவு 10 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது தாமான் இடமான், தாமான் தம்புன் ஜெயா, தாமான் மெராக் மற்றும் தாமான் மெராக் ஜெயா ஆகிய இடங்களில் உள்ள 3,950 பயனர்களைப் பாதிக்கும்” என்று அது கூறியது.எனவே, பயனர்கள் போதுமான தண்ணீரை சேமித்து வைக்குமாறு PBAPP அறிவுறுத்தியது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *