பிளாஸ்டிக் கழிவு மாசுபாடு குறித்து தேசிய அளவிலான சட்டம்!

- Shan Siva
- 10 Feb, 2025
போர்ட் கிள்ளான், பிப் 10: பிளாஸ்டிக் கழிவு மாசுபாட்டை சமாளிக்க 13வது
மலேசியா திட்டத்தின் (13MP) கீழ் தேசிய அளவிலான சட்டத்தை
அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக இயற்கை வளம் மற்றும்
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது தெரிவித்தார்.
பிளாஸ்டிக்
கழிவுகளை மிகவும் நிலையான முறையில் நிர்வகிப்பதற்கான அமைச்சின் முயற்சிகளின் ஒரு
பகுதியாக இந்த நடவடிக்கை இருப்பதாக அவர் கூறினார்.
தற்போதைய சட்டக்
கட்டுப்பாடுகள் மற்றும் அமலாக்கம் உள்ளூர் அதிகாரிகளுக்கு (PBT) மட்டுமே என்றும் அவை ஒரு விரிவான கொள்கையை உருவாக்கவில்லை என்றும் அவர்
கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *