சாக்குகளில் அடைக்கப்பட்ட பூனைகள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 13: செராஸ் பத்தாவது மைலில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு வெளியே பூனைகள் சாக்குகளில் அடைக்கப்படுவது தொடர்பாக வைரலான வீடியோவில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காரையும் பொருட்களையும்  சிலாங்கூர் கால்நடை சேவைகள் துறை (DVS) பறிமுதல் செய்துள்ளது.

வழக்கு குறித்த தகவலைப் பெற்ற பிறகு, விலங்கு நல அதிகாரிகள் குழு அந்த இடத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டதாகத் நேற்றிரவு ஓர் அறிக்கையில் அத்துறை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த சம்பவம் நடந்ததாகவும், இதில் வீட்டு வளாகத்தின் கட்டிட நிர்வாகத்தால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட சுத்தப்படுத்தும் நிகழ்வின் போது அப்பகுதிவாசிகள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பல சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு வாகனம், சாக்குகள் மற்றும் கூண்டுகளைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூனைகள் சாக்குகளில் அடைக்கப்பட்டதாக இரண்டு புகார்கள் வந்ததாக காஜாங் காவல்துறைத் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *