தேர்தலுக்கு நிதி அளிக்க சவூதி மன்னர் உறுதி- நீதிமன்றத்தில் நஜிப் சாட்சியம்!

- Muthu Kumar
- 03 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 3-
கடந்த 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது தமக்கு நிதிஆதரவு அளிப்பதற்கு சவூதி அரேபியாவின் காலஞ்சென்ற மன்னர் அப்துல்லா வாக்குறுதி அளித்தார் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். தமக்கு எதிரான 1எம்டிபி வழக்கில் நேற்று தற்காப்பு வாதம் செய்தபோது நஜிப் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டில் மன்னர் அப்துல்லாவைச் சந்தித்தபோது பிரதமராகத் தொடர்ந்து அதிகாரத்தில் நீடித்துவர தமக்கு உதவுவதாக அவர் வாக்களித்தார் என்று நஜிப் குறிப்பிட்டார்.ஆனால், எனக்கு எவ்வளவு நன்கொடை அளிக்கப்படும் எனும் விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும், சவூதியின் "ரியாத் பேங்க்” வங்கி மூலம் நன்கொடை அளிக்கப்பட்டது. மன்னரின் நான்கொடையை உறுதிப்படுத்தும் கடிதங்களையும் அவரின் அரசப் பிரதிநிதிகள் அனுப்பி வைத்தனர்.
இந்நோக்கத்திற்காக அம்பேங்க் வங்கியில் கணக்குத் திறந்தேன் என்றார் நஜிப்.கிட்டத்தட்ட நூறு கோடி டாலர் எனக்கு கிடைக்கவுள்ளது என்று ஒரு வர்த்தகரான ஜோலோ அதன்பின் என்னிடம் தெரிவித்தார். அந்தப் பணப் பரிமாற்றம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்று பேங்க் நெகாரா மலேசியாவும் அம்பேங்கும் அப்போது என்னிடம் தெரிவிக்கவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டில் 1எம்டிபி மீது நடத்தப்பட்டபுலன்விசாரணையின் ஒரு பகுதியாக என்னிடமும்மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையமும் (எம்ஏசிசி) விசாரணை நடத்தியது.
ஆனால், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாக என்மீது குற்றம் சுமத்தப்படும் என்று அப்போது தெரிவிக்கவில்லை என்றார் நஜிப் 1எம்டிபி நிறுவனத்திற்குச் சொந்தமான 228 கோடி வெள்ளியைக் கையாடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் நஜிப் மீது 4 அதிகாரத் துஷ்பிரயோக குற்றங்களும் 21 கள்ளப்பணப் பரிமாற்றக் குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன. அந்த வழக்கில் நஜிப் தற்காப்புவாதம் புரிந்து வருகிறார்.நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுய்ரா முன்னிலையில் நடைபெற்றுவரும் இவ்விசாரணை இன்று தொடரும்..
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *