இங்கே மூடி மறைக்க எதுவும் இல்லை! எம்.ஏ.சி.சிக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம்! – பூப்பந்து ஆணையத்தின் தலைவர் டத்தோ வி சுப்பிரமணியம்

- Sangeetha K Loganathan
- 03 Dec, 2024
டிசம்பர் 3,
தேசிய பூப்பந்து ஆணையத்தில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை நடத்தியது தொடர்பாகப் பல்வேறு ஊகங்கள் வெளியாகி வரும் நிலையில் தேசிய பூப்பந்து ஆணையம் மிகவும் வெளிப்படையாக இருக்கும் ஆணையம் என்றும் மூடி மறைக்க இங்கே எதுவும் இல்லை என்றும் அதன் தலைவரான டத்தோ வி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
எம்.ஏ.சி.சி அதன் வேலையைச் செய்கிறது. அதனைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை, மடியில் கனம் இல்லாததால் வழியில் பயமில்லை. இந்த விவகாரம் தொடர்பாக எம்.ஏ.சி.சிக்கு முழுமமையாக நாம் ஒத்துழைப்போம் என அதன் தலைவரான டத்தோ வி சுப்பிரமணியம் உறுதியளித்தார்.
தற்போது லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் அதன் விசாரணையை மேற்கொள்கிறது. எம்.ஏ.சி.சியின் விசாரணையை முடிக்கும் வரையில் நாங்களும் பொறுமையுடன் காத்திருக்கிறோம். தேசிய பூப்பந்து ஆணையத்திடம் உள்ள அனைத்து ஆவணங்களும் பரிவர்த்தனைகளும் வெளிப்படையானதாகவும் நம்பகத்தன்மையுடன் உள்ளதாகவும் விசாரணைக்குப் பின்னர் தெளிவான விளக்கத்தை வழங்குவதாக அதன் தலைவரான டத்தோ வி சுப்பிரமணியம் உறுதியளித்தார்.
Pemangku Presiden BAM, Datuk V Subramaniam, menyerahkan sepenuhnya kepada SPRM untuk menyiasat dakwaan salah laku pegawai tinggi BAM. Beliau menegaskan badan itu akan memberi kerjasama penuh sehingga siasatan selesai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *