9 மாநிலங்களில் 87,825 பேர் வெள்ளத்தால் பாதிப்பு!

- Sangeetha K Loganathan
- 30 Nov, 2024
நவம்பர் 30,
தொடர் கனமழையால் மலேசியாவில் உள்ள 9 மாநிலங்கள் மிகுந்த சேதத்தமடைந்தது மட்டுமின்றி 9 மாநிலங்களில் 27,111 குடும்பங்களைச் சேர்ந்த 87,825 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரனகளுக்காக 550 வெள்ள நிவாரண மையங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது.
வெள்ளத்தால் அதிகம் பாதிப்பிற்குள்ளான மாநிலங்களின் பட்டியலில் கிளாந்தான் முதலிடத்தில் உள்ளது. கிளாந்தானில் 10 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுள்ளது. 20,631 குடும்பங்களைச் சேர்ந்த 65,965 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ளனர்.
திரங்கானுவில் 4,904 குடும்பங்களைச் சேர்ந்த 16,725 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கெடாவில் 940 குடும்பங்களைச் சேர்ந்த 2,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெர்லீசில் 125 குடும்பங்களைச் சேர்ந்த 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெகிரி செம்பிலானில் 397 குடும்பங்களைச் சேர்ந்த 1,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
மலாக்காவில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜொகூரில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Sebanyak 87,825 orang daripada 27,111 keluarga di 9 negeri di Malaysia terjejas akibat banjir. Kelantan paling teruk dengan 65,965 mangsa, diikuti Terengganu, Kedah, dan negeri lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *