வெள்ளத்தில் சிக்கிய நால்வர்! மேம்பாலத்தின் கீழ் மீன்பிடித்தவர்களுக்கு எச்சரிக்கை!

top-news

டிசம்பர் 13,

மழை காலங்களில் மீன்பிடிக்க ஆறுகளுக்குச் செல்ல வேண்டாம் என பேராக் மாநில மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad எச்சரிக்கை விடுத்துள்ளார். சித்தியவானில் உள்ள Raja Permaisuri Bainun பாலத்தின் கீழ் மீன் பிடிக்க சென்ற ஆற்று நீர் மேலோங்கியதால் வெளியேற முடியாமல் பாலத்தின் அடியிலேயே சிக்கியதாக அவசர அழைப்பு அதிகாலை கிடைத்த நிலையில் பாலத்தின் கீழ் சிக்கியிருந்த நால்வரையும் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

பொழுது போக்கிற்காக மீன் பிடிக்க வந்ததாக நால்வரும் தெரிவித்திருந்த நிலையில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகப் பேராக் மாநில மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். மழை காலங்களில் ஆறுகளில் நீரோட்டம் அதிகமாவதைக் கணிக்க முடியாத சூழலில் இருப்பதால் மீன்பிடிப்பதாக ஆறுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

Empat individu terperangkap ketika memancing di bawah Jambatan Raja Permaisuri Bainun, Sitiawan, diselamatkan awal pagi Khamis. Bomba menggunakan bot dari Balai Bomba dan Penyelamat Sitiawan untuk membantu mangsa akibat air meningkat dan deras.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *