வெள்ளத்தால் 1,026 பேர் பாதிப்பு! நிலச்சரிவில் இருவர் பலி!

- Sangeetha K Loganathan
- 29 Jan, 2025
ஜனவரி 29,
சரவாக்கின் தென் மாவட்டங்களில் பெய்த கனத்த மழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,026 ஆக உயர்ந்துள்ளதாகச் சரவாக் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையமான JPBN தெரிவித்துள்ளது.
சரவாக்கின் Kuching, Serian, Bintulu, Miri, Siburan, Tatau, Bau, Simunjan ஆகிய மாவட்டங்களில் 14 வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தற்காலிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மீரி மாவட்டத்தில் உள்ள Kampung Lereng Bukit பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் பலியானதாகவும் தெரிய வந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்புப் பணியாளர்களும் சமூக ஆர்வலர்களும் மீட்டு வருவதால் பாதிக்கப்பட்டவர்கள் உயரமான இடத்தில் பாதுகாப்பாக இருக்கும்படியும் சரவாக் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையமான JPBN வலியுறுத்தியது.
Banjir dan tanah runtuh akibat hujan lebat di Sarawak menjejaskan 1,026 mangsa. Dua orang terkorban dalam kejadian tanah runtuh di Kampung Lereng Bukit, Miri. JPBN membuka 14 pusat pemindahan sementara di beberapa daerah untuk menempatkan mangsa banjir.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *