RM 1.4 மில்லியன் மதிப்பிலானப் போலி முத்திரையிடப்பட்ட பொருள்கள் பறிமுதல்! – DATUK M.KUMAR

- Sangeetha K Loganathan
- 11 Dec, 2024
டிசம்பர் 11,
ஜொகூரில் உள்ள பிரபல வணிகத்தளமான kompleks Austin Perdana வணிகத்தளத்தில் போலியானப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஜொகூர் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் RM 1.4 மில்லியன் மதிப்பிலானப் போலி முத்திரையிடப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக JOHOR மாநிலக் காவல் துறை தலைவர் DATUK M.KUMAR தெரிவித்தார்.
350 முதல் 500 ரிங்கிட் விலையில் போலி முத்திரையுடன் பொருள்கள் விற்கப்படுவதாகவும் முறையான அரிமம் இல்லாது வெளிநாட்டுப் பொருள்களையும் சம்மந்தப்பட்ட வணிகத்தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும் DATUK M.KUMAR தெரிவித்தார்.
சோதனைக்குப் பின்னர் வணிகத் தளத்தின் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் 20 முதல் 47 வயதுடைய மலேசியர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Pihak polis Johor merampas barangan dengan cap palsu bernilai RM 1.4 juta dalam serbuan di Kompleks Austin Perdana. Lima individu berusia 20 hingga 47 tahun, termasuk pemilik premis, ditahan kerana menjual barangan tanpa lesen yang diimport dari luar negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *