அட்டை பெட்டிக்குள் பெண் குழந்தை!

- Sangeetha K Loganathan
- 17 Dec, 2024
டிசம்பர் 17,
உணவுக் கடையின் அலமாரியில் பிறந்த குழந்தை இருப்பதாகக் கடையின் உரிமையாளர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். Yong peng நகரில் உள்ள உணவுக் கடையில் மாலை 5.30 மணியளவில் உணவுகள் அடுக்கி வைக்கும் அலமாரியில் அட்டை பெட்டி இருப்பதைக் கண்ட உணவக உரிமையாளர் பெட்டிக்குள் பெண் குழந்தை இருப்பதாகப் புகார் அளித்தாக batu pahat மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார்.
உணவகத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தை தற்போது Sultanah Nora Ismail மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் குழந்தையின் பெற்றோர்கள் தொடர்பாக விசாரித்து வருவதாகவும் வணிகத்தளங்களில் உள்ள கண்காணிப்புக் கேமிராக்களின் மூலமாகத் தேடி வருவதாகவும் Shahrulanuar Mushaddat தெரிவித்தார்.
Seorang bayi perempuan ditemui dalam kotak di sebuah restoran di Yong Peng. Bayi kini dirawat di Hospital Sultanah Nora Ismail, dan polis sedang menyiasat identiti ibu bapa melalui rakaman CCTV.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *