இறந்த குழந்தையைப் பதப்படுத்தி வைத்து பணம் பறித்த மருத்துவமனை!

- Sangeetha K Loganathan
- 14 Dec, 2024
டிசம்பர் 14,
மருத்துவமனையின் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்தும் வரையில் இறந்து பிறந்த குழந்தையைப் பெற்றோர்களிடமிருந்த மறைத்து வைத்த தனியார் மருத்துவமனையின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகச் சுகாதார அமைச்சர் Datuk Seri Dr. Dzulkefly Ahmad தெரிவித்தார்.
கிள்ளானில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தம்பதியரிடம் மருத்துவச் செலவுகளுக்கானப் பணம் செலுத்த முடியாத நிலையில் சுமார் 2 வாரங்களாகக் குழந்தையின் உடல் நலன் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்ததாகவும் சிகிச்சைக்கானக் கட்டணம் RM 3,600 ரிங்கிட் செலுத்த வேண்டுமென்றும் அதன் பின்னர் மேல் சிகிச்சைகள் தொடருமென்றும் தெரிவித்த நிலையில் சுமார் 2 வாரங்கள் குழந்தையைக் காட்டாமல் இழுத்தடித்து பணத்தைச் செலுத்தியதும் குழந்தை இறந்ததாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் பிரேதப் பரிசோதனை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட போது குழந்தை இறந்து 2 வாரங்கள் ஆகியதும் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து உடலைப் பதப்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சுகாதார அமைச்சின் CKAPS எனும் தனியார் சுகாதார மையக் கட்டுப்பாட்டு ஆணையம் விசாரணையை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebuah hospital swasta di Klang didakwa menyimpan mayat bayi yang telah meninggal dunia selama dua minggu untuk menuntut bayaran RM3,600 daripada ibu bapa. Siasatan oleh Kementerian Kesihatan sedang dijalankan untuk menyiasat insiden ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *