2,337 இளைஞர்கள் மீது ஊழல் புகார்கள்! – SPRM

top-news

டிசம்பர் 10,

மலேசியாவில் இளைஞர்களிடையே உழலும் லஞ்சமும் அதிகரித்து வருவதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் ((SPRM)) தலைமை ஆணையர் Tan Sri Azam Baki தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 2,337 இளைஞர்கள் ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் 1,073 ஊழல் புகார்கள் இளைஞர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் 575 இளைஞர்கள் ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் Tan Sri Azam Baki தெரிவித்தார். இது போன்ற புள்ளிவிவரங்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஊழல், லஞ்சம் பெறுதல், லஞ்சம் கொடுத்தல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், பணமோசடி என ஈடுபட்ட 16 முதல் 40 வயதினர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளாக உயர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Sebanyak 2,337 belia berumur 16-40 tahun ditahan SPRM dalam tempoh lima tahun atas pelbagai kesalahan rasuah, dengan 1,073 pertuduhan. SPRM giat mendidik masyarakat meningkatkan integriti dan membanteras rasuah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *