மற்றொரு ஊழல் எதிர்ப்பு பேரணிக்கு BERSIH தயார்!

- Sangeetha K Loganathan
- 27 Jan, 2025
ஜனவரி 27,
ஊழலுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அரசாங்கம் கண்டுக் கொள்ளவில்லை என்றால் மற்றொரு போராட்டத்தைப் பெர்சே பேரணி இயக்கம் நடத்தவிருப்பதாக அதன் தலைவர் Muhammad Faisal Abdul Aziz தெரிவித்தார். ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் எதிராக அரசு செயல்பட வேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்க்கும் நிலையில் அரசாங்கம் அலட்சியமாக் இருக்க வேண்டாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் பொதுமக்களின் குரலாகவும் உள்ளது என்றும் கடந்த காலங்களில் உள்ள ஊழல் வழக்குகளை அரசாங்கம் முறையாகக் கையாளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். குறிப்பிட்ட சிலர் மீது தொடுக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களை அரசாங்கம் சமர்ப்பிக்க தவறியதால் நீதிமன்றம் ஊழல் வழக்குகளை ரத்து செய்துள்ளது.
ஊழல்வாதிகளாக வெளிப்படையாகக் கருதப்பட்ட பலரும் தற்போது ஆதரமில்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதற்கும் அரசாங்கம் ஒரு முக்கிய காரணம் என அவர் தெரிவித்தார்.
Pengerusi BERSIH, Muhammad Faisal Abdul Aziz memberi amaran bahawa himpunan rakyat lebih besar akan digerakkan jika kerajaan terus mengabaikan tuntutan mahasiswa dan rakyat untuk bertindak terhadap rasuah. Beliau menuduh kerajaan gagal menangani kes rasuah dengan telus.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *