பண்டிகை காலங்களில் இலவச டோல் கட்டணம் ரத்து – சரியான நடைமுறை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 22: போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தின் முன்னாள் வாரிய உறுப்பினர் ஒருவர், பண்டிகை காலங்களில் சுங்கச்சாவடி இலவச கட்டணத்தை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவைப் பாராட்டியுள்ளார், இதுபோன்ற கொள்கைகள் நெரிசலைக் குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சாலை பாதுகாப்பு ஆர்வலரான ஷாஹ்ரிம் தாம்ரின், பண்டிகை காலங்களில் இலவச டோல் கட்டணம் வழங்கும் முறை, அதிக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் என்பதோடு, நெருப்பில் மண்ணெண்ணெய் ஊற்றுவதற்குச் சமம் என்று தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகளில் மட்டுமல்லாது, இரண்டாம் நிலை சாலைகளில் பரவி நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் போக்குவரத்து நிறுத்தங்களை இது உருவாக்கும் என்று அவர் கூறினார்.

இது போன்ற கட்டணச் சலுகைகள் போக்குவரத்து நிலைத்தன்மை மற்றும் திறமையான போக்குவரத்து நிர்வாகத்தை தோற்கடித்து, நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகளில் மோசமான சாலை நெரிசலுக்கு பங்களிக்கின்றன என்று மூன்று ஆண்டுகளாக மலேசிய சாலை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் வாரிய உறுப்பினராக இருந்த ஷாஹ்ரிம் கூறினார்.

கட்டணமில்லா பயணம் சாலை நெரிசலை அதிகரித்தது மட்டுமல்லாமல், அதிக எரிபொருள் நுகர்வுக்கு வழிவகுக்கிறது. கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் மற்றும் வெளிப்புற காற்று மாசுபாட்டிற்கும் வழிவகுப்பதாக அவர் கூறினார்.

ஆராய்ச்சியின் படி, நகர்ப்புறங்களில் காற்று மாசுபாட்டிற்கு சாலை போக்குவரத்து 70% க்கும் அதிகமாக பங்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களுக்கு அரசாங்கம் இனி இலவச டோல் கட்டணத்தை நடைமுறைபடுத்தாது என பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி நேற்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *