பாதுகாப்பு ஜாக்கெட் இல்லாமல் கடலில் பயணித்தவர்கள் 20 பேர் கைது!

top-news

பிப்ரவரி 3,

கடலில் சுற்றுலா மேற்கொண்ட ஒரு கும்பல் பாதுகாப்பு ஜாக்கெட்டுகளைப் பயன்படுத்தாமல் இருந்ததைக் கண்ட கடல்சார் பாதுகாப்பு ஆணையம் படகில் இருந்த 20 பயணிகளைத் தடுப்புக் காவலில் கைது செய்தது. 20 பயணிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மேலதிக விசாரணைக்காகப் பாதுகாப்புடன் கடல்சார் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் கரைக்குக் கொண்டு வந்தனர்.

Kuala Besut கடலில் 9 மைல் தூரத்தில் பயணித்த படகின் கேப்டன், உதவியாளர், 7 குழந்தைகள் என 20 பயணிகள் சுற்றுலா மேற்கொண்டிருந்த நிலையில் பாதுகாப்பிற்கான ஜாக்கெட் அணியாமல் இருந்ததால் அவர்கள் அனைவரையும் கைது செய்ததாகத் திரங்கானு மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணைய இயக்குநர் Mohd Khairulanuar Abdul Majid தெரிவித்தார். 

Maritim Terengganu menahan bot yang membawa 20 penumpang termasuk tujuh kanak-kanak kerana tidak memakai jaket keselamatan. Bot itu beroperasi tanpa lesen sah semasa perjalanan dari Kuala Besut ke Pulau Perhentian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *