ஆற்றில் கவிழ்ந்த படகு! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீட்பு! இளைஞர் பலி!

top-news

பிப்ரவரி 15,

மலாக்கா மெர்லிமாவ் ஆற்றில் குடும்பத்துடன் படகில் பயணித்த நால்பவ்ர் ஆற்றில் மூழ்கியதில் மூவர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் அதே குடும்பத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஆற்றில் மூழ்கி காணாமல் போன நிலையில் இன்று நண்பகல் 2.21 மணிக்குச் சடலமாக மீட்கப்பட்டார். இன்று காலை 10.35 மணிக்கு அவசர அழைப்புக் கிடைக்க பெற்ற நிலையில் மெர்லிமாவ், ஜாசின் மாவட்டங்களைச் சேர்ந்த 12 மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியை மேற்கொண்டதாக மீட்பு நடவடிக்கை அதிகாரி Abdillah Hamid தெரிவித்தார்.

மீட்கப்பட்ட 45 வயது ஆடவரும் 35 வயது பெண்ணும் 10 வயது குழந்தையும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். அவர்கள் குடும்பமாக ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது படகு கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சுமார் 4 மணிநேரத் தேடுதலுக்குப் பின் 21 வயதான Nur Fitri Abdul Rahman உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மீட்பு நடவடிக்கை அதிகாரி Abdillah Hamid தெரிவித்தார்.

Sebuah bot terbalik di Sungai Merlimau, Melaka menyebabkan seorang pemuda 21 tahun maut manakala tiga ahli keluarganya berjaya diselamatkan. Pasukan penyelamat menemui mayat mangsa selepas pencarian selama empat jam. Kesemua mangsa sedang memancing sebelum kejadian berlaku.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *