8 வயது சிறுமியிடம் ஆபாச அணுகுமுறை! ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 30: எட்டு வயது சிறுமியை பாலியல் நோக்கில் அணுகும் பொருட்டு தனது கால்சட்டையை அவிழ்த்ததாக துப்புரவு பணியாளர் ஒருவர் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டார்.

29 வயதான இக்மால் மன்சோர் எனும் அந்த நபர் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் செராஸில் முள்ள PPR அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடிப்படியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 15(a)(i) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, RM20,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *