ஜொகூர் ஜாலான் கோத்தா திங்கி-மெர்சிங் சாலை KM45 ல் விபத்து!

top-news
FREE WEBSITE AD

மெர்சிங், டிச 16:

ஜொகூர் ஜாலான் கோத்தா திங்கி-மெர்சிங் சாலை  KM45 இல் நடந்த விபத்தில் 36 வயது ஆடவர் ஒருவரும், அவரது வயதான பெற்றோரும் கொல்லப்பட்டனர். அவரது ஐந்து வயது குழந்தை காயமடைந்தது.
நேற்று இரவு 8.30 மணியளவில் விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று மெர்சிங் காவல்துறை தலைவர் அப்துல் ரசாக் அப்துல்லா சானி கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், குவாந்தனில் இருந்து ஜோகூர் பாரு நோக்கிச் சென்ற காரின் 28 வயது ஓட்டுநர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்ததாக அவர் கூறினார்.

இதனால், 36 வயதான ஓட்டுநருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், மெர்சிங் மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாகவும் அப்துல் ரசாக் தெரிவித்தார்.65 மற்றும் 71 வயதுடைய அவரது பெற்றோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *