தங்காக்கில் விபத்து! இருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

தங்காக், ஜன 25: ஜொகூர் தங்காக்கில்  நடந்த கார் விபத்தில் இருவர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்தனர்.

நேற்று இரவு 10.08 மணியளவில் விபத்து நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டதாக தங்காக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி முகமட் ஷாஹித் அப்த் ரசாக் தெரிவித்தார்.

தங்காக் தீயணைப்பு நிலையத்திலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் தாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதாக  அவர் இன்று கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வாகனங்களில் சிக்கவில்லை.

இந்த விபத்தில் 56 வயதுடைய இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர். காரில் இருந்த 53 மற்றும் 21 வயதுடைய இரண்டு பெண்கள் காயங்களுடன் தப்பினர்என்று முகமட் ஷாஹித் மேலும் கூறினார்.

மற்ற வாகனத்தில் இருந்த இரு ஆண்களும் ஒரு பெண்ணும்  காயமடைந்துள்ளனர் என்றார்.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *