பஹாவ் - ரொம்பின் சாலையில் விபத்து! ஐவர் பலி!

- Shan Siva
- 13 Feb, 2025
சிரம்பான், பிப் 13: ஜாலான் பஹாவ்-ரொம்பின் சாலையில் கி.மீ. 6 இல் நேற்று இரவு மூன்று வாகனங்கள் மோதிய சாலை விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இரவு 9 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் பெரோடுவா
ஆக்சியா, டொயோட்டா மார்க் எக்ஸ்
மற்றும் ஃபோர்டு ரேஞ்சர் ஆகிய வாகனங்கள் பாதிக்கப்பட்டதாக ஜெம்போல் மாவட்ட
காவல்துறைத் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
பலியானவர்களில்
நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றவர் கோலா பிலா
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது இறந்தார் என்று அவர் கூறினார்.
முதற்கட்ட
விசாரணைகளின் அடிப்படையில், ரொம்பினில்
இருந்து பஹாவ் நோக்கிச் சென்ற 16, 18 மற்றும் 19 வயதுடைய மூன்று
பயணிகளை ஏற்றிச் சென்ற பெரோடுவா ஆக்சியாவின் 31 வயது ஓட்டுநர், 51 வயது நபர் ஓட்டிச் சென்ற டொயோட்டா மார்க் எக்ஸ் மீது மோதியதில் விபத்து
ஏற்பட்டதாக ஹூ கூறினார்.
இந்த மோதலின்
விளைவாக பெரோடுவா ஆக்சியா சுழன்ற நிலையில், 43 வயது நபர் ஓட்டி வந்த ஃபோர்டு ரேஞ்சர் மீது மோதியது.
பெரோடுவா
ஆக்சியாவின் ஓட்டுநர் மற்றும் காரில் இருந்த இரண்டு பயணிகள், டொயோட்டா மார்க் எக்ஸ் காரின் ஓட்டுநர் ஆகியோர்
தலை மற்றும் காலில் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஹூ
கூறினார்.
விபத்தில் பலியான
மற்றொருவர் பெரோடுவா ஆக்சியாவில் பின்பக்க இருக்கையில் இருந்தவர் ஆவார். அவர் கோலா பிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது
இறந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *