வாகனத்தை முந்திச் செல்கையில் விபத்து! 17 வயது நபர் பலி

- Shan Siva
- 22 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 22: நேற்று இரவு கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள சுல்தான் யஹ்யா பெட்ரா பாலத்தில் ஒரு
கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் ஓர் பதின்ம வயதுடய நபர்
இறந்தார்.
17 வயது
பாதிக்கப்பட்டவர் ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் இருந்து
வந்த ஒரு கார் மீது மோதியதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்
சம்பவ இடத்திலேயே இறந்தார்,. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக யுனிவர்சிட்டி
செயின்ஸ் மலேசியா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
30 வயதுடைய காரின்
ஓட்டுநரின் கையில் சிறிது காயம் ஏற்பட்டது, சிகிச்சைக்காக ராஜா பெரெம்புவான் ஜைனாப் மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *