சோழன் திரை விழா! விருதும் அங்கீகாரமும்!

top-news

மலேசியப் பிரதமர் துறை, கலை கலாச்சாரச் சுற்றுலா அமைச்சு, கெடா மாநில அரசு என அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் சமூகக் கலைத்துறையில் ஈடுபட்டுள்ள முக்கியத்துவமானவர்களை அங்கீகரிக்கும் வகையில் சோழன் திரை விழா எதிர்வரும் டிசம்பர் 29, கெடாவின் சுங்கை பெட்டாணீயில் உள்ள ரிவர்ஃபிரண்ட் சிட்டியில் நடைபெறவிருக்கிறது.

அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்று இந்த விருது விழா நடத்தப்படுவதால் பிரம்மாண்டமும் தரமும் நிறைந்த விருது விழாவாக அமையும் என ஏற்பாட்டுக் குழுவான சாய் நந்தினி திரைப்பட நிறுவனம் தெரிவித்துள்ளது. குறும்படம், இசை காணொலிகள், தெலீமூவீஸ், ஆவணப்படங்கள், திரைப்படங்கள், என பல்வேறு விருதுகள் வழங்கப்படவிருக்கிறது. விருது வழங்கப்படுவது மட்டுமின்றி படைப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குச் சாய் நந்தினி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்புகளையும் வழங்கப்படும் என நம்பிக்கை அளிப்பதாகச் சோழன் திரை விருது நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு தலைவரும் திரைப்பட இயக்குநருமான விக்னேஷ் பிரபு தெரிவித்தார்.

சோழன் திரைப்பட விருது விழாவில் பங்கேற்கும் எண்ணம் கொண்டுள்ள படைப்பாளர்கள் 016-4509539 எனும் எண்ணில் தொடர்புக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *