பள்ளி பேருந்து கட்டணம் உயரலாம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 8: மலேசிய பள்ளி பேருந்து நடத்துநர்கள் சங்கம் வரும் பிப்ரவரியில் தொடங்கும் 2025 பள்ளி அமர்வுக்கான பள்ளி பேருந்து கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேருந்து நடத்துனர்களுக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள பரஸ்பர ஒப்பந்தத்தைப் பொறுத்து, ஒரு மாணவருக்கு RM5 முதல் RM10 வரை கட்டண உயர்வு இருக்கும் என்று Utusan Malaysia தெரிவித்துள்ளது.

அரசு தலையீடு இல்லாமல், பேருந்து நடத்துநர்களுக்கும் பெற்றோருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று மலேசிய பள்ளி பேருந்து நடத்துநர்கள் சங்கத் தலைவர் Mohd Rofik Mohd Yusof கூறினார்.

இந்த உயர்வு பரஸ்பர உடன்படிக்கையின் அடிப்படையிலானது. பெற்றோர்கள் உடன்படவில்லை என்றால், அவர்கள் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற மற்றொரு பேருந்து நடத்துநரைத் தேர்வு செய்யலாம். பொதுவாக, அசல் விலையில் இருந்து RM5 மற்றும் RM10 க்கு இடையில் அதிகரிப்பு இருக்கும். இது இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான விகிதமாகக் கருதப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

உதிரி பாகங்களின் விலை உயர்வு மற்றும் புதிய குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருப்பதால், 2025 பள்ளி அமர்வுக்கு பள்ளிப் பேருந்துக் கட்டணம் RM10 முதல் RM20 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், தேசிய பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களின் ஆலோசனைக் குழுவின் (PIBGN) தலைவர் இணைப் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் அலி ஹசன், பள்ளி பேருந்துக் கட்டணத்தை உயர்த்தும் முடிவானது பெற்றோர், பள்ளிகள் மற்றும் PIBG ஆகியோருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *