சனூசிக்குப் பினாங்கு வேண்டுமா? நீதிமன்றத்திற்கு வரட்டும்! - Chow Kon Yeow

- Sangeetha K Loganathan
- 29 Nov, 2024
நவம்பர் 29,
பினாங்கைக் கெடாவுடன் இணைக்க வேண்டுமெனும் கோரிக்கையைப் பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow மறுத்தார். சனூசியிடம் ஆதாரமோ செய்தியோ இருந்தால் அவர் தாராளமாக வெளியிடலாம். அவருக்குப் பினாங்கை ஆள வேண்டும் எனும் எண்ணம் இருந்தா பினாங்கு சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிப் பெற்றால் ஆட்சையும் அமைக்கலாம் என Chow Kon Yeow தெரிவித்தார். அதையும் மீறி பினாங்கு கெடாவுடன் இணைக்க வேண்டும் என சனூசி அடம்பிடித்தால் நீதிமன்றம் வந்து பினாங்கு வேண்டும் என வழக்கு தொடுக்கலாம் என Chow Kon Yeow பதிலளித்தார்.
மாநிலச் சுயாட்சிக் கொள்கைகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறைகள் உள்ளதைச் சனூசி அறிந்திருக்க வேண்டுமென Chow Kon Yeow நினைவுருத்தினார். மாநில முதலமைச்சர்களாக இருப்பவர்கள் தேசிய இறையாண்மையைக் காக்கும் மனப்பான்மை கொண்டிருக்க வேண்டுமே தவிர பிரிவினை வாதத்தை முன்வைக்க கூடாது என அவர் தெரிவித்தார்.
Ketua Menteri Pulau Pinang, Chow Kon Yeow, menolak tuntutan Sanusi untuk menyatukan Pulau Pinang dengan Kedah. Chow menyarankan Sanusi membawa bukti atau memfailkan tuntutan di mahkamah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *