முதன்முறையாக தாவரங்கள் சுவாசிப்பதை காணொளியாக வெளியிட்ட விஞ்ஞானிகள்!
- Muthu Kumar
- 20 Jan, 2026
தாவரங்கள் மனிதர்களைப் போலவே சுவாசிக்கின்றன என்பது நாம் அறிந்ததே. ஆனால், அந்தச் சுவாசம் எவ்வாறு நிகழ்கிறது என்பதைத் தத்ரூபமாகப் படம்பிடிப்பது சவாலாக இருந்தது.
ஐந்து ஆண்டுகாலக் கடின உழைப்பிற்குப் பிறகு, அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழக (University of Illinois) விஞ்ஞானிகள் இதனைச் சாத்தியமாக்கியுள்ளனர்.
தாவரங்களின் இலைகளில் ஆயிரக்கணக்கான நுண்துளைகள் உள்ளன. இவை 'ஸ்டோமாட்டா' (Stomata) அல்லது 'இலைத் துளைகள்' என்று அழைக்கப்படுகின்றன. ஒளிச்சேர்க்கையின் போது கார்பன் டை ஆக்சைடை (CO2) உறிஞ்சவும், அதே நேரத்தில் அதிகப்படியான நீரை நீராவியாக வெளியேற்றவும் (Transpiration) இந்தத் துளைகள் பயன்படுகின்றன.
மனிதனின் கண்கள் இமைப்பதைப் போலவே, இந்த இலைத் துளைகளும் குறிப்பிட்ட இடைவெளியில் திறந்து மூடுகின்றன. இதனைத்தான் விஞ்ஞானிகள் தற்போது காணொளியாகப் பதிவு செய்துள்ளனர்.
இந்த அரிய நிகழ்வைப் படம்பிடிக்க விஞ்ஞானிகள் இரண்டு முக்கிய தொழில்நுட்பங்களை இணைத்துப் பயன்படுத்தியுள்ளனர்: இது விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஒரு புதிய கருவி. மிகச்சிறிய அணுக்களையும் துல்லியமாகக் காட்டும் 'கான்ஃபோகல் மைக்ரோஸ்கோப்' மற்றும் படங்களைச் சீரமைக்கும் 'மெஷின் லேர்னிங்' மென்பொருள் மூலம் இலைத் துளைகளின் இயக்கம் கண்காணிக்கப்பட்டது.
உலகில் முதன்முறையாக தாவரங்கள் சுவாசிப்பதை பதிவு செய்த காணொளி இது என்பது குறிப்பிடத்தக்கது..
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



