பொருளாதாரம், தொழில்நுட்பம், இருவழி உறவு-தக்சின், அன்வார் சந்திப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 28-

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவை நேற்று சந்தித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவருடன் பொருளாதாரம், தொழில்நுட்பம், இருவழி உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவத்தின் அதிகாரபூர்வமற்ற ஆலோசகரான தக்சினுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்ககரமானதாகவும் பயனுடையதாகவும் இருந்தது என்று தமது முகநூல் பக்கத்தில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டுதல், தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஊக்க மளித்தல், தென் தாய்லாந்தில் அமைதியைக் கொண்டு வருதல், மியன்மார்நெருக் கடிக்குத் தீர்வு காணுதல் போன்றவை எங்களின் பேச்சுக்கு மையப் புள்ளியாக இருந்தது என்று அன்வார் சொன்னார்.

இவ்வட்டாரத்தில் தக்சின் அமைத்துள்ள உறவுப் பாலம் மிக வலுவானதும் விரிவானதும் ஆகும். இந்த உறவும் அவரின் தனித்துவமிக்க நிபுணத்துவமும் மலேசியாவுக்கும் ஆசியானுக்கும் விலைமதிப் பற்ற வாய்ப்புகளை உருவாக்கும். தற்போதைய சவால்களை மிகுந்த நம்பிக் கையுடன் எதிர்கொள்வதற்கும் இது உறுதுணையாக இருக்கும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *