கிரிப்டோகரன்சியில் RM9.47 மில்லியனை இழந்த முதியவர்!

- Sangeetha K Loganathan
- 15 Jan, 2025
ஜனவரி 15,
Cryptocurrency எனும் இயங்கலை நாணயத்தில் முதலீடு செய்த 63 வய்து பொறியியளாளர் RM9.47 மில்லியனை இழந்துள்ளதாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் பெறப்பட்ட விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு ஒரு புலனக் குழுவில் (WHATSAPP GROUP) இணைந்தவர் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் 11 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு 29 பணப்பரிவர்த்தனைகள் மூலம் RM9.47 மில்லியனை முதலீடு செய்ததாக ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M. Kumar தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட புலனக் குழுவிலிருந்து (WHATSAPP GROUP) இருவர் தொடர்புக் கொண்டு முதற்கட்டமாக RM88 மில்லியன் லாபம் கிடைத்ததாகக் கூறியதாகவும், லாபத் தொகையைப் பெற மீண்டும் RM800,000 செலுத்த வேண்டும் என தெரிவித்த நிலையில் முதலீடு செய்த முதியவர் பணம் செலுத்த மறுத்ததை அடுத்து தனது முதலீடு பணத்தையும் மொத்தமாக இழந்துள்ளதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Seorang jurutera berusia 63 tahun kerugian RM9.47 juta selepas ditipu dalam pelaburan cryptocurrency. Mangsa terpedaya dengan iklan media sosial dan pemindahan wang ke 11 akaun bank. Penipuan berlaku melalui kumpulan WhatsApp yang menjanjikan keuntungan besar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *