மாச்சாங்கில் போலீஸாரைத் தாக்க முயன்ற குற்றவாளிக்குச் சூடு

top-news
FREE WEBSITE AD

மாச்சாங், ஏப். 9-

Universiti Teknologi MARA (UiTM) Machang முன்பாக போலீஸாரைப் பாராங் கத்தியுடன் தாக்க முயன்ற ஒரு நபர், போலீஸார் மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கையில் சுட்டுக்காயமடைந்தார். சம்பவம் நேற்று இரவு நடைபெற்றது.

30 வயதுகளுக்கு உட்பட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர், வலது தொடைப்பகுதியில் காயமடைந்து தற்போது Hospital Machang மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல்களின் படி, இரவு சுமார் 10.45 மணியளவில் போலீஸ் ரோந்து குழு, இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து UiTM Machang முன்புள்ள ATM இயந்திரம் அருகில் நின்றதை கவனித்தது. பின்னர், அதில் ஒருவர் வங்கிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் அதிகாரிகள் சோதனைக்காக அணுகிய போது, அந்த நபர் ஒத்துழைக்க மறுத்ததுடன், திடீரென பாராங் கத்தியைப் பயன்படுத்தி தாக்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அதிகாரிகள் தங்களது பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுத்து, சந்தேகநபரை சுட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மற்றொரு நபரை கண்டறியும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *