109 பள்ளிகளுக்குப் பேரிடர் விடுமுறை! - திரங்கானு

top-news

நவம்பர் 30,

திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 109 ஆரம்பப் பள்ளிகளுக்கும் இடைநிலைப்பள்ளிகளுக்கும் பேரிடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகத் திரங்கானு மாநிலக் கல்வி இலாகா தெரிவித்துள்ளது. 

சுமார் 2,405 மாணவர்களுக்கும் மேல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 113 பள்ளிக் கட்டிடங்கள் வெள்ள நிவாரண மையங்களாகச் செயல்படும் நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

SPM தேர்வை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்கள் குறித்து பள்ளிகளுக்கு அவர்களுக்கானக் கற்றல் கற்பித்தலை நடத்தும் வழிமுறைகள் குறித்தும் ஆராய்ந்து வருவதாகத் திரங்கானு மாநிலக் கல்வி இலாகா உறுதியளித்துள்ளது.

Sebanyak 109 sekolah di Terengganu diberi cuti bencana akibat banjir, melibatkan 2,405 pelajar. 113 bangunan sekolah dijadikan pusat pemindahan sementara, manakala SPM calon dipantau untuk pembelajaran berterusan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *