RM23.67 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருளுடன் மூவர் கைது!

- Sangeetha K Loganathan
- 15 Feb, 2025
பிப்ரவரி 15,
வெளிநாட்டிலிருந்து மலேசியா வழியாக இந்தோனேசியாவுக்குக் கடத்த முயன்ற 571.72 கிலோ போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் புக்கிட் அமான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் JSJN தலைமை இயக்குநர் Datuk Seri Khaw Kok Chin தெரிவித்தார். Bandar Sri Damansara குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் போதைப்பொருளின் மதிப்பு RM23.67 என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காவல்துறையினர் சம்மந்தப்பட்ட கும்பலிடமிருந்து RM163,500 ரொக்கமும், Mercedes Benz E240, BMW 523i, Honda City என 3 சொகுசு வாகனங்களையும் பறிமுதல் செய்ததாகவும் தெரிய வந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து போதைப்பொருளை இந்தோனேசியாவிற்குக் கடத்தவிருப்பதாகவும் தற்காலிகமாக மலேசியாவில் பதுக்கி வைத்திருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கும் நிலையில் மேலதிக விசாரணைக்காக அவர்கள் மூவரும் 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக JSJN தலைமை இயக்குநர் Datuk Seri Khaw Kok Chin தெரிவித்தார்.
Tiga individu ditahan bersama 571.72kg dadah bernilai RM23.67 juta di Bandar Sri Damansara. Sindiket ini dipercayai menyeludup dadah dari luar negara ke Indonesia melalui Malaysia. Polis turut merampas wang tunai RM163,500 serta tiga kenderaan mewah dalam serbuan tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *