இந்து ஆலயங்கள் ஒவ்வோர் ஆண்டும் நிதியைப் பெறலாம்! - Nga Kor Ming!

- Sangeetha K Loganathan
- 29 Nov, 2024
நவம்பர் 29,
இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தளங்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி பெற முடியும் எனும் கருத்தை வீட்டுவசதி உள்ளாட்சி அமைச்சின் அமைச்சர் Nga Kor Ming மறுத்தார். ஒவ்வோர் ஆண்டும் இந்து கோயில்கள் பராமரிப்பிற்கும் மேம்பாட்டிற்கும் விண்ணப்பிக்கலாம் என்றும் ஒவ்வோர் ஆண்டும் நிதி வழங்கப்படும் என்று Nga Kor Ming தெரிவித்தார்.
மடானி அரசின் சமயக் கொள்கையின் வாயிலாக மலேசியாவின் அனைத்து சமயங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதைத் தாம் உறுதி செய்வதாக அவர் உறுதியளித்தார். இந்த ஆண்டு அக்தோபர் மாதம் வரையில் 422 இஸ்லாம் அல்லாத சமய வழிபாட்டுத் தளங்களும் RM 46.23 MILLION வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் 147 இந்து கோயில்களும் 21 சீக்கியக் கோயில்களுக்கும் RM21.35 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2025 பட்ஜெட்டில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்களுக்கு RM50 மில்லியந் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நினைவுருத்தினார். தவறானச் செய்திகளைத் தலைப்புச் செய்தியாக்கி மக்களைக் குழப்ப வேண்டாம் என்றும் அரசியல் தலைவர்கள் இது மாதிரியானத் தவறானக் கருத்துகளைப் பரப்புவதற்குப் பதிலாக நேரடியாக அமைச்சிடம் கேட்கலாமென அவர் தெரிவித்தார்.
Nga Kor Ming menegaskan kuil Hindu boleh memohon dana setiap tahun untuk penyelenggaraan. Kerajaan Madani telah memperuntukkan RM50 juta dalam Belanjawan 2025 untuk tempat ibadat bukan Islam, dengan RM21.35 juta diberikan tahun ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *