2 ஆண்டுகளாக சிறையில் நடிகர் தர்ஷன்; இன்னும் ஓராண்டு விடுதலை இல்லை என தகவல்
- Surendran Sumdraraj
- 12 Jun, 2026
பெங்களூர், ஜூன் 12 –
கன்னட நடிகர் தர்ஷன் தொடர்பான பரபரப்பான கொலை வழக்கில் நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் உள்ளதுடன், இன்னும் குறைந்தது ஓராண்டு காலத்திற்கு வெளியே வர வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரேணுகாசுவாமி கொலை வழக்கில் முக்கிய குற்றச்சாட்டின் கீழ் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கு கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கில் பல்வேறு சாட்சிகள், தடயவியல் ஆதாரங்கள் மற்றும் விசாரணை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சட்டநடைமுறைகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால், வழக்கின் இறுதித் தீர்ப்பு வருவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம் என சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தர்ஷன் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



