போதை விருந்து! - 3 இளம்பெண்கள் உட்பட 9 பேர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினபாலு, டிச 19: கோத்தா கினபாலுவில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற போதை விருந்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த  ஒன்பது பேரில் மூன்று இளம்பெண்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கோத்தா கினாபாலு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையைத் தொடர்ந்து 20 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்  நகர காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் காசிம் முடா தெரிவித்தார்.

ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்கிய சந்தேகநபர்கள் போலீசார் அவர்களின் வளாகத்திற்குள் நுழைந்தபோது போதையில் இருந்ததாக அவர் கூறினார்.

 அனைத்து சந்தேக நபர்களுக்கும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர்கள் மெத்தாம்பெத்தமைன் உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *