தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கழகத்தில் பாரம்பரிய ஒளிக்கதிர்கள்!

top-news
FREE WEBSITE AD


தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் ஒளிக்கதிர்கள் எனும் தலையாயத்தில் தீபாவளி ஒன்றுக்கூடல் சிறப்பாக நடந்தேறியது. புதீபாவளியின் பிரகாசத்தையும் பாரம்பரியத்தின் நெஞ்சார்ந்த பண்புகளையும் ஒருங்கே கொண்டாடும் சிறப்பான நிகழ்வாக அமைந்ததாக ஆசிரியர் பயிற்சிக் கழகத் தமிழ் துறையின் தலைவர் முனைவர் திருமதி ஜமுனா தேவராஜ் தெரிவித்தார்.

தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கழகத்தில் 51 மாணவர்கள் பயிலும் நிலையில் தீபாவளி ஒளிக்கதிர் நிகழ்ச்சியில் முன்னாள் விரிவுரையாளர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். பள்ளிகளில் கற்பித்தல் முறைகளுடன் நிகழ்ச்சிகளையும் நடத்துவது ஆசிரியர்களின் பணிகளோடு கலந்த நிலையில் இந்த தீபாவளி நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் நிகழ்ச்சிகளின் நெறிமுறைகளை அனுபவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இளம் தலைமுறையிடம் பாரம்பரிய விழாக்களின் ஆழமான முக்கியத்துவத்தை பறைசாற்றும் தகுந்த வழியாய் மாறியது என்றும் கிராமிய நடனங்களுடன் பாரம்பரியக் கலைகளையும் நடத்தி தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கழகத்திற்குப் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம், பயிற்சி ஆசிரியர்கள் தங்கள் நிர்வாகத் திறன்களை நயமாகப் பொருத்துவதோடு, பள்ளிகளில் இத்தகைய பாரம்பரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும்,
மாணவர்களுக்குப் பாரம்பரியத்தின் செழுமையை உணர்த்துவார்கள் என நம்புகிறோம். இதன் வாயிலாக, தீபாவளியின் ஒளியையும் ஒற்றுமையின் ஆழத்தையும் எதிர்காலத் தலைமுறையிடம் சிந்திக்க வைக்க நெருங்கிய அணுகுமுறையையும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர். பிரமுகர்களும் முன்னாள் விரிவுரையாளர்களும் தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். ஒளி, உற்சாகம் என ஒற்றுமை ஒன்றிணைந்த திருவிழாவாக, தெமேங்கொங் இப்ராஹீம் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தின் வரலாற்றில் நிலைத்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *