நன்கொடை திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது! – மலாக்கா

- Sangeetha K Loganathan
- 10 Dec, 2024
டிசம்பர் 10,
பொது இடங்களில் சிறார் பாதுகாப்பு மையங்களை நடத்தி வருவதாகப் பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்த இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
மலாக்காவில் உள்ள Klebang அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக மத்திய மலாக்கா காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். 33 வயது ஆண் அவரின் காதலியான 35 வயது பெண்ணுடன் இணைந்து நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாகப் பலரையும் ஏமாற்றி பணம் பெற்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் RM250 நிதியாகத் திரட்டப்படுவதாக Christopher Patit தெரிவித்தார்.
Polis Melaka menahan pasangan kekasih berusia 33 dan 35 tahun di Klebang kerana menipu orang ramai dengan mengutip derma palsu untuk pusat perlindungan kanak-kanak. Penipuan ini didakwa berlaku sejak dua tahun lalu di beberapa negeri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *