பெண்ணின் புகைப்படத்தை நிர்வாணமாக்கி ஆன்லைனில் விற்பனை! - காவல்துறை விசாரணை

- Shan Siva
- 23 Jan, 2025
பெட்டாலிங் ஜெயா, ஜன 23: ஒரு பெண்ணின் புகைப்படங்களை நிர்வாணமாக்கி ஆன்லைனில் பதிவேற்றப்பட்டது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட
மலேசியரான சம்பந்தப்பட்ட பெண், கடந்த ஜனவரி 20 ஆம் தேதி புகார் அளித்ததாக பெட்டாலிங் ஜெயா
காவல்துறைத் தலைவர் ஷாருல்னிசாம் ஜாஃபர் தெரிவித்தார்.
தனது
புகைப்படங்கள் தன்னை நிர்வாணமாகக் காட்டுவதற்காகத் திருத்தப்பட்டு, அடையாளம் தெரியாத ஒருவரால் ஒவ்வொன்றும் RM18க்கு ஆன்லைனில் விற்கப்பட்டதாக அந்தப் பெண் புகாரில்
தெரிவித்துள்ளதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 292 இன் கீழ்
விசாரிக்கப்படுகிறது. இது குறித்து தகவல்
தெரிந்தவர்கள் காவல்துறையில் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *