RXZ மோட்டார் சைக்கிள் கூட்டம்: அனைவரையும் தண்டிக்கக் கூடாது - அக்மல் சாலே

top-news

கோலாலம்பூர், டிச. 15-

சமீபத்தில் மலாக்காவில் நடந்த RXZ மெம்பர்ஸ் ரைட் 3.0 மோட்டார் சைக்கிள் பேரணியை விமர்சிப்போர் நியாயமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மத் அக்மல் சாலே வலியுறுத்தினார். சிலரின் பொறுப்பற்ற செயல்களை முழு நிகழ்ச்சியையும் குற்றம் சாட்டுவதற்கு காரணமாக்கக் கூடாது என்று அவர் கூறினார்.

அக்மல் சாலே கூறுகையில், சிவப்பு விளக்கை மீறுதல் அல்லது தவறான திசையில் செல்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களை விமர்சிப்பதிலும் தண்டிப்பதிலும் தனக்கு உடன்பாடு உண்டு. "இத்தகைய செயல்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், பிற சாலை பயனாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதால், அவர்களை கண்டிப்பது அவசியம்" என்று அவர் தெரிவித்தார்.

எனினும், சில தனிநபர்களின் தவறுகளால் முழு நிகழ்ச்சியையும் எதிர்மறையாக சித்தரிப்பது நியாயமற்றது என்று அக்மல் வலியுறுத்தினார். பெரும்பாலான பங்கேற்பாளர்கள் சாலை விதிகளை கடைப்பிடித்து அமைதியாக பங்கேற்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சி மலாக்கா சுற்றுலாவை ஊக்குவிப்பதுடன், சிறு வியாபாரிகள், ஹோட்டல்களுக்கு பொருளாதார லாபத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *