900 லிட்டர் டீசலைப் பதுக்கித ஆடவர் கைது! – கெடா

- Sangeetha K Loganathan
- 14 Feb, 2025
பிப்ரவரி 14,
கெடாவில் உள்ள கிடங்கில் 900 லிட்டருக்கும் மேலான மானிய விலை டீசலைப் பதுக்கியதாக நம்பப்படும் 30 வயது தாய்லாந்து ஆடவரும் 60 வயது உள்ளூர்வாசியும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட கிடங்கிலிருந்து லாரியில் உள்ள பீப்பாய்களில் டீசலை நிரப்பும் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கெடா மாநில உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறை (KPDN) இயக்குநர் Muhammad Nizam Jamaludin தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட கிடங்கின் உரிமையாளர் என நம்பப்படும் 60 வயது உள்ளூர் ஆடவர் மானிய விலையான டீசலில் கலவைகளைக் கலந்து அதனைத் தாய்லாந்துக்குச் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்து வருவதாகவும் அவருக்கு உதவியாளராகத் தாய்லாந்து ஆடவர் லாரியைக் கொண்டு வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட டீசலுடன் RM 30,000 மதிப்பிலானப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
Dua lelaki termasuk seorang warga Thailand ditahan di Kedah kerana menyeludup 900 liter diesel subsidi ke Thailand. Seorang lelaki tempatan berusia 60 tahun dipercayai pemilik stor manakala warga Thailand membawa lori. Barang rampasan bernilai RM30,000 turut disita.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *