முஸ்லிம்கள் அல்லாத பிற மத நிகழ்வுகள் கலந்து கொள்வதற்கான ஆலோசனை!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, பிப் 7:

முஸ்லிம்கள் அல்லாத பிற மத நிகழ்வுகள் அல்லது கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை அமைச்சரவை இன்று விவாதிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மத விவகார அமைச்சரால் அறிவிக்கப்பட்டபடி, முஸ்லிம்கள் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு முன்பு, முஸ்லிம் அல்லாதவர்கள் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையிடம் (ஜாக்கிம்) ஒப்புதல் பெற வேண்டும் என்ற திட்டம் குறித்து கேட்டபோது பிரதமர் இவ்வாறு கூறினார்.

இன்று புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களின் தணிக்கை நடைமுறைப்படுத்தலைத் தொடங்கி வைத்த பிறகு, பிரதமர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

முன்னதாக, முஸ்லிம்கள் அல்லாதவர்களின் கொண்டாட்டங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் ஈடுபடுவது குறித்து தெளிவான விதிகளை வகுக்க புதிய வழிகாட்டுதல்கள் செயல்பாட்டில் இருப்பதாக நயிம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *