சுங்கை கோலோக்கில் உள்ள சட்டவிரோத தளங்களில் அமைதி நிலவுகிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 17-

கிளந்தானில் பள்ளித் தவணை தொடங்கும் போதெல்லாம், கலகலப்பாகக் காணப்பட்டு வந்த சுங்கை கோலோக்கில் உள்ள சட்டவிரோத தளங்கள், தற்போது ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி அமைதியாக காணப்படுகின்றன.

இத்தகைய சட்டவிரோத தளங்கள் வழியாக எல்லையைக் கடந்து தாய்லாந்துக்குச் செல்லவும் மலேசியாவுக்குள் நுழையவும் போலீசார் தடை விதித்த பின்னர், கடந்த டிசம்பர் முதல் அத்தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவர்களுக்கு எதிராகவும் விதிக்கப்பட்டுள்ள இத்தடையை அனைத்துத் தரப்பினரும் பின்பற்றி வருவதே இதற்கு காரணமாக இருக்கிறது.சுங்கை கோலோக்கில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பது, மாணவர்களின் முதல் தேர்வாக இருந்து வந்த பல சட்டவிரோத தளங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

தாய்லாந்தின் சுங்கை கோலோக் பகுதியில் சில படகுகளை மட்டுமே காண முடிந்தது. ஆனால், அவை இயக்கப்படாமல் ஆற்றங்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ரந்தாவ் பாஞ்சாங்கில் கல்வி கற்று வரும் கோலோக்கில் வசிக்கும் நூற்றுக் கணக்கான மாணவர்கள், இதற்கு முன்னர் சுங்கை கோலோக்கிலிருந்து படகு வழியாக பள்ளிக்குச் சென்று வந்தபோது அப்பகுதிகள் ஆள்நடமாட்டம் அதிகம் இருந்தவையாக காணப்பட்டன.தற்போது அம்மாணவர்களில் பெரும்பாலோர், குடிநுழைவு, சுங்கத்துறை, பரிசோதனை மற்றும் பாதுகாப்பு காம்ப்ளெக்சைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பல மாணவர்கள் பள்ளி தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளனர். பல மாணவர்கள் தங்களின் உறவினர்கள் வீடுகளில் தங்கி ரந்தாவ் பாஞ்சாங் பள்ளியில் படிக்கத் தொடங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி அத்தடைச் சட்டம் அமலுக்கு வந்தது முதல், கங்கை கோலோக்கில் நிலைமை மாறியிருப்பதாகவும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாகவும், 56 வயதுடைய ஹசியா என்பவர் கூறினார்.

இதற்கு முன்னர் மாணவர்கள் அதிகளவில் காணப்பட்டனர் என்றும் சுங்கை கோலோக் ஆற்றில் படகுகள் சேவையில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கும் என்றும் கூறிய அவர், தற்போது நிலை தலைகீழாக மாறியிருப்பதாகத் தெரிவித்தார். "எல்லையைக் கடக்கும்போது கைது செய்யப்பட்டால் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்பதாலும் ஆயிரக் கணக்கில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதாலும் அனைவரும் பயப்படுகின்றனர். ஏன் பிரச்சினையை தேடிக் கொள்ள வேண்டும்?அதனால், அப்பகுதி மக்களும் மாணவர்களும் தற்போது சட்டப்பூர்வமான நுழைவாயில்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாக ஹசியா கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *