12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

ஈப்போ, டிச.14-

கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி காலை 6.40 மணி மற்றும் செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 6.40 மணியளவில் சிம்மோர் அருகில் உள்ள பண்டார் பாரு என்னும் இடத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியின் உதவி ஆசிரியரும், வட கிந்தா கல்வி இலாகாவிலும் பணியாற்றுபவருமான 37 வயது தெஹ் ஹு டெய்க் என்பவர் 12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று நேற்று 12.12.2024 இல் இங்குள்ள செஷன்ஸ் நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

நீதிபதி ஜீன் ஷர்மிளா ஜேசுதாசன் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் குற்றம் சட்டப்பட்டவர் மறுத்து விசாரணை கோரினார். அரசு தரப்பு துணை வழக்கறிஞர் குர்து ஐனி கலிபா குற்றம் சாட்டப்பட்டவருக்கு வெ.50,000க்கும் குறையாமல் பிணைப்பணம், மற்றும் கூடுதல் நிபந்தனைகளுடன் விடுவிக்க வேண்டும் என்று நீதி மன்றத்தில் முன்வைத்தார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பில் அவருடைய வழக்கறிஞர் எஸ்.தீபன் தமது கட்சிக்காரரின் பொருளாதாரத்தை நினைத்து அவருக்கு பிணைப்பணம் வெ.7,000 மாக குறைக்கும்படி நீதி மன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

இரு தரப்பிலும் செவி மடுத்திய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வெ.7,000 பிணைப் பணம் மற்றும் தனிநபரின் உத்தரவாதத்துடன். இந்த வழக்கு தொடர்வதற்கு முன்னர் ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் காவல் நிலையத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். முதல் குற்றசாட்டில் குழந்தைகள் பாலியல் குற்றவியல் சட்டம் 2017 பாவு 14 (கு கீழ் யந்த ஆசிரியர் மீது கொண்டுவரப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கசையடி வழங்கும் குற்றசாட்டுடன், இரண்டாம் குற்றச்சாட்டில் அதே குற்றவியல் சட்டம் பிரிவு 16 இன் கீழ் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் இரண்டு கசையடிகளுக்கும் குறையாத கூடுதல் தண்டனை வழங்கவும் சட்டம் உண்டு. இந்த வழக்கு வரும் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வருகிறது என்றும் நீதி மன்றம் தெரிவித்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *