புதருக்குள் நின்ற வாகனத்தில் பிணம்!

- Shan Siva
- 30 Dec, 2024
மெர்சிங், டிச 30: ஜாலான்
ஜெலுவாங்-கஹாங் சாலை கிமீ 26 இல் புதரில் காணப்பட்ட காரில் ஓர் ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
மெர்சிங்
காவல்துறைத் தலைவர் அப்துல் ரசாக் அப்துல்லா சானியின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட 28 வயதான நபர், கழுத்தில் காயங்களுடன் கருப்பு நிற புரோட்டான் வாஜாவில் முழுமையான உடையில்
காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
நேற்று முன் தினம்
பிற்பகல் 1.50 மணியளவில் கார்
கண்டுபிடிக்கப்பட்டதும் பொதுமக்களிடமிருந்து போலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு
வந்ததாக அவர் கூறினார்.
சேகரிக்கப்பட்ட
தகவல்களின் அடிப்படையில், சிறப்பு
புலனாய்வு குழு நேற்று அதிகாலை 4.30 மணியளவில்
வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணைக் கைது செய்ததாக
அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
இதனை அடுத்து 33 மற்றும் 35 வயதுடைய இருவரும் ஏழு நாட்கள் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *