சுங்கை பகாங்கில் காட்டு யானையின் சடலம்!

top-news
FREE WEBSITE AD

ஜெராண்டுட், டிச 2:

கம்போங் பெசூல், லுபோ பெனோர் அருகே உள்ள சுங்கை பகாங்கில் காட்டு யானையின் சடலம் நேற்று மிதந்த நிலையில் காணப்பட்டது.மீன்பிடி வலையை வீசிக் கொண்டிருந்த மீனவர் அஸ்மான் யூசாஃப் எனும் 54 வயது ஆடவர்  மாலை 6 மணியளவில் ஆற்றில் யானை மிதப்பதைக் கண்டதாகக் கூறினார்.

ஆற்றங்கரையில் ஏராளமான மரக் கழிவுகள் மிதந்ததால், சடலத்தை ஆற்றில் விட முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
வலுவான நீரோட்டத்தால் யானை நழுவி ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று தாம் நம்புவதாக அஸ்மான் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *