வாகன நிறுத்துமிட அபராதம் செலுத்த மார்ச் 2025 வரை கெடு வழங்கப்பட்டுள்ளது!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

பந்திங் ஜன.10-

மாவட்ட ரீதியில் நகராண்மைக் கழகத்தின் கண்காணிப்பில் இருந்து வரும் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் செலுத்தாமல் வானங்களை நிறுத்தி வைத்த குற்றத்தை எதிர்நோக்கி வரும் வாகனமோட்டிகளுக்கான அபராதத் தொகையை செலுத்துவதற்கு வரும் 31.3.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் தலைவர் முகமட் ஹஸ்ரி நோர் முகமட் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் இறுதி வரை வாகன நிறுத்துமிடக் குற்றத்திற்காக அபராதக் கடிதங்கள் பெற்றும்  அதற்கான அபராதத் தொகையை செலுத்தத் தவறியுள்ள வாகனமோட்டிகள் நகராண்மைக் கழகத்தின் வாகன நிறுத்துமிடக் கட்டணம் செலுத்தும் பகுதியில் தங்களது அபராதத் தொகையை செலுத்த வரும்போது அவர்களுக்கு மொத்த அபராதத் தொகையில் 15 சதவீதம் கழிவு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *