மருத்துவக் காப்புறுதிக் கட்டண அதிகரிப்பு-பேச்சுவார்த்தை அளவில்தான் இருக்கிறது!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, டிச. 7 -

மருத்துவக் காப்புறுதிக் கட்டண விகித அதிகரிப்பு தொடர்பான விவகாரம் இன்னமும் பேச்சுவார்த்தை மட்டத்தில்தான் இருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.இதில் சம்பந்தப்பட்டிருக்கும் தரப்புகளுடன் மீண்டும் பேச்சுகள் நடத்தப்பட்ட பின்னரே, மருத்துவக் காப்புறுதிக் கட்டண விகித அதிகரிப்பை பேங்க் நெகாரா மலேசியா (பிஎன்எம்) தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

"உண்மையில், காப்புறுதித் தரப்பினருடன் மீண்டும் பேச்சு நடத்திய பின்னரே காப்புறுதிக் கட்டண விகித உயர்வை பிஎன்எம் முடிவு செய்ய விரும்புகிறது."இது வரையில் அது குறித்து இன்னமும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று, புத்ராஜெயாவில் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது, நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

மிக நியாயமான அளவில் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய, மறுபடியும் கட்டண விதிப்பைத் தீர்மானிக்கும் வியூகத்தை சரிபார்க்குமாறு காப்புறுதி நிறுவனங்களுக்கும் தக்காஃபுல் சேவையாளர்களுக்கும் பிஎன்எம் உத்தரவிட்டுள்ளது.

பாலிசிதாரர்கள் மற்றும் தக்காஃபுல் பங்கேற்பாளர்களுக்கு எதிராக ஏற்படக் கூடிய தாக்கத்தை கருத்தில் கொண்டு, கட்டண விகிதத்தை,பங்களிப்பை தொடர்ந்து உயர்த்துவதை நிர்வகிப்பதும் அந்த விவகாரங்களில் அடங்கும் என்று பிஎன்எம் கூறியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *