சரவாக்கில் அபாயம் உள்ள பகுதிகளைக் கண்காணிக்க நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 30: சரவாக் அரசாங்கம் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில், குறிப்பாக மலைப்பாங்கான மற்றும் உயரமான இடங்களில், தொடர் கனமழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

அபாயம் உள்ள பகுதிகளை, குறிப்பாக மீரியில் மலை சரிவுகள் உள்ள பகுதிகளை கண்காணிக்க சரவாக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவுக்கு (ஜேபிபிஎன்எஸ்) உத்தரவிடப்பட்டுள்ளதாக சரவாக் மாநில பிரீமியர் அபாங் ஜோஹாரி ஓபங் கூறினார்.

முன்னதாக, மீரி நிலச்சரிவில் சிக்கிய பாதிக்கப்பட்டவரின் உடல் மீட்கப்பட்டதாக போர்னியோ போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது, இது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்தது.

இறந்த மற்ற நான்கு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *