4 மாத குழந்தை மரணம் – 6 பேரிடம் போலீஸ் வாக்குமூலம்

- Shan Siva
- 11 Jan, 2025
கோலா லங்காட், ஜன 11: டாஸ்காவில் நான்கு மாதக் குழந்தை இறந்தது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆறு பேரிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
கோலா லங்காட் மாவட்ட காவல்துறை தலைவர் முகமட் அக்மல்ரிசல் ரட்ஸி, இதில் பராமரிப்பாளரும் அடங்குவதாகக் கூறினார்.
விசாரணைகள்
இன்னும் நடந்து கொண்டிருப்பதாகவும், மேலும்
பாதிக்கப்பட்டவர் நீண்ட காலமாக மேற்பார்வை இல்லாமல் விடப்பட்டதால், பராமரிப்பாளரின் அலட்சியப் பிரிவு தற்போது
கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர்
கூறினார்.
உடல் மீதான பிரேத
பரிசோதனைக்குப் பிறகு ஆய்வக சோதனை முடிவுகளுக்காக போலீசார் இன்னும்
காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
ஜனவரி 3 ஆம் தேதி, மூச்சுத் திணறியதால், சௌஜனா புத்ராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையைக் காப்பாற்ற முயன்று ஆம்புலன்ஸ் மூலம் சைபர்ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் குழந்தை அன்று மதியம் உயிரிழந்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *