எங்களால் இனி காத்திருக்க முடியாது!

- Muthu Kumar
- 07 Dec, 2024
கோலாலம்பூர், டிச 7:
பாரிசான் நேஷனலின் மாற்றம் அதன் இளைய உறுப்பினர்களைச் சார்ந்தது, தலைவரின் தோள்களில் மட்டும் இருக்கக்கூடாது என்று பாரிசான் நேஷனல் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே தெரிவித்தார்.
பாரிசான் புதிய தலைமுறை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எதிர்காலத்தில் கூட்டணி பொருத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்கான மாற்றத்திற்கான முயற்சிகளுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எங்களால் இனி காத்திருக்க முடியாது. மாற்றம் நமக்குள்ளேயே தொடங்குகிறது. இது நமது சகாப்தம், அதை நம் வழியில் வடிவமைப்போம் என்று கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற பாரிசானின் 50வது ஆண்டு விழாவில் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *